Translate

பரமகானானும் தடைகளும்

    கர்த்தருடைய தாசனாகிய மோசேக்கும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. மோசே இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து கானான் தேசத்துக்கு நேராக வழிநடத்தினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ நம்மை பாவ அடிமைத்தனங்களிலிருந்து விடுவித்து பரமகானானுக்கு நேராக பரலோக வாழ்வுக்கு நேராக வழிநடத்துகிறார்.

    கானானை நோக்கி பயணம் செய்த இஸ்ரவேலர்களை அவர்களுக்கு முன்னிருந்த செங்கடலோ பின்தொடர்ந்து வந்த பார்வோனும் அவனது படையினருமோ தடுக்க முடியவில்லை. வேற்று நாட்டு மன்னர்கள் கூட அவர்களது வருகையை கேட்டு அஞ்சி நடுங்கினர். ஆனால் அவர்களது அவிசுவாசமும் தேவனுக்கு விரோதமான முறுமுறுப்புகளும் பாவங்களும் எகிப்திலிருந்து புறப்பட்டவர்களில் இருவர்தவிர மற்றவர்கள் அனைவரும் வனாந்தரத்திலே மடிந்துவிடக் காரணமாயிற்று.

    நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து நம் பாவங்களுக்காக பலியாகி நம்மை பாவ அடிமைத்தனங்களிலிருந்து விடுவித்து நமக்காக யுத்தம்செய்கிறவராக; நம்மை தேற்றுகிறவராக; அரவணைக்கிறவராக; பாதுகாக்கிறவராக; நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்திவருகிறார். எந்தவிதமான பிசாசுகளின் போராட்டங்களோ; சாபங்களோ, வியாதிகளோ, பிரச்சினைகளோ, நாம் பரலோகத்திற்கு செல்வதை தடுத்துவிடமுடியாது ஆனால் தேவன் வெறுக்கின்ற அருவருக்கின்ற காரியங்கள் நம்மில் காணப்படுமேயானால் நாம் அழிந்துபோவதற்கு அவைகள் காரணமாகக்கூடும். வேதம் சொல்லுகிறது 'பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்....'- (வெளி 21:8). பாவங்களை எதிர்த்து நிற்க்க பரிசுத்தமாக வாழ நாம் ஆவியில் பலம்வாய்ந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.

    சகோதரனே.! சகோதரியே.!. பாவம் நிறைந்த இந்த உலகத்தில் நான் எப்படி பரிசுத்தமாக வாழ்வது என்று கலங்குகிறாயா.? இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் 'நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன்....' (யோவா 14:18)

சிந்தனைக்கு:-
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்...(அப் 1:8)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக