Translate

வாக்குமாறாத தேவன்.

    இஸ்ரவேல் தேசத்தில் ராஜாவைவிட செல்வாக்குமிக்க நபரான சாமுவேல் தீர்க்கதரிசி; பெத்லகேம் என்ற சிறிய ஊரில் வாழ்ந்துவந்த வயதான மனிதனான ஈசாயின் வீட்டுக்கு வந்து; பலசாலிகளான, ராணுவவீரர்களான மூத்த சகோதரர்கள் 7-பேரையும் விட்டுவிட்டு; எங்கோ ஒரு வனந்தரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த, குடும்பத்தினரால்கூட கிட்டத்தட்ட மறக்கப்பட்டுபோன; இளைய குமாரனான தாவீதை தேடிப்பிடித்து வரவழைத்து ராஜாவாக அபிஷேகம்பண்ணினார். (1சாமு 16:11) பின்பு சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

    அபிஷேகம்பண்ணப்பட்ட தாவீதுக்கு கிடைத்த மரியாதை என்ன?. சற்றும் தாமதிக்காமல், எந்த வனந்திரத்திலிருந்து சமுவேலின் கட்டாயத்தினால் வரவழைக்கப்பட்டானோ, அதே வனாந்திரத்துக்கு விட்டுவந்த ஆடுகளை மேய்கும்படியாக அவனது தந்தையால் அனுப்பப்பட்டார். (1சாமு 16:16) சகோதரனே.! சகோதரியே.! உன்னை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். உன்னைக்கொண்டு அவர் செய்ய நினைத்ததை யார் தடுத்தாலும் உன்னைக்கொண்டே செய்துமுடிக்க வல்லவர். தாவீதின் வாழ்கையிலும்; அதுதான் நடந்தது.

    ராஜாவாயிருந்த சவுலுக்கு சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனுடைய உதவி தேவைப்பட்டது. சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத்தேடி, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான். அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.

    அந்த செய்தியை கேட்டவுடன்: எந்த ஈசாய் தாவீதை வனந்திரத்துக்கு அனுப்பினானோ அதே ஈசாய்.! அவனை வெகுதீவிமாய் அழைப்பித்து அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதையின்மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான். தாவீது சவுல் ராஜாவின் அரண்மனையை அடைந்தான். படிப்படியாக கர்த்தர் அவனை பயிற்றுவித்து இஸ்ரவேலின் வரலாற்றில் தவிற்க்கவியலாத மாபெரும் மன்னனாக மாற்றினார். வேதம் சொல்லுகிறது நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை. (ஆதி 28:15)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக