Translate

சுபாவங்கள் & பழக்கவழக்கங்களில் மறுரூபம்..!

    வழிகாட்டியின் துணையுடன்  ஒரு மலையேற்றக் குழு உயரமான மலை சிகரம் ஒன்றை அடையும் படி பயணம் மேற்கொண்டது அவர்களில் சாகசம் புரிவதில் மிகுந்த ஆர்வமும் துடுக்குத் தனமும் மிகுந்த இளைஞன் ஒருவன் இருந்தான். மற்றவர்களை விட வேகமாக மலை உச்சியை அடைய வேண்டும்; பார்ப்பவர்கள் மிரளும் அளவுக்கு சவாலான புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என பல தனிப்பட்ட செயல் திட்டங்களுடனும் புகைப்படகருவி மற்றும் ருசித்து சாப்பிட பல விதமான தின்பண்டங்களுடனும் குழுவுடன் இணைந்து பயணம் புறப்பட்டான். அதை கண்டவழிகாட்டி அவனை எச்சரித்தார் தேவையற்ற எடை மற்றும் வேகமான நடை எளிதில் சோர்வடையச் செய்யும்; தேவையற்ற உணவுகள் உபாதைகளை உண்டாக்கும்; குழுவுடன் சேர்ந்து பயணிப்பதே பாதுகாப்பானதும் இனிமையானதுமாகும் என்றெல்லாம் ஆலோசனை வழங்கினார். ஆயினும் அவன் தனது முடிவில் உறுதியhக  நின்றபடியால் மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் அமைதி காத்தார்.

    அவர்களது பயணம் இனிதே துவங்கியது . அந்த துடுக்குத் தனம் மிக்க இளைஞன் குழுவினரைவிட வேகவேகமாக முன்னேறினான்; சற்று தொலைவு சென்றவுடன் வழிகாட்டி சொன்னவற்றின் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்தது. ஆசையாசையாய் கெண்டுவந்த பலவற்றை வழியில் வீசிவிட்டு மேற்கொண்டு செல்ல ஆரம்பித்தான். எனினும் சேர்வடைந்தவனாய் மேற்கொண்டு செல்லமுடியாதவாறு ஓர் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான். தன்தவறை உணர்ந்தவனாக அவ்வழியே வந்த பழைய குழுவினருடன் மீண்டுமாக இணைந்துகொண்டான். 

    பவுல் அப்போஸ்தலன் இவ்வாறு கூறுகின்றார்  நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். (பிலி 3:10-11) சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலி 3:13), சங்கீதம் பின்வருமாறு கூறுகிறது, "வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே." (சங் 119:9)

    சகோதரனே.! சகோதரியே.! நம்முடைய கானான் பயணத்தை சீர்ருலைக்கும் சுபாவங்கள் பழக்கவழக்கங்களை அகற்றுவோம் நம் முன்மாதிரியும் நம்முடைய கர்த்தரும் நம்முடைய இரடசகருமாகிய இயேசு கிறிஸ்து காட்டிய பாதையில் நடப்போம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிகாண்போம்.

     சிந்தனைக்கு:-
  •   குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். (சங் 2:12)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக