Translate

சிந்தனைகள் சீராவதாக.. for Christian youths

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். (1தெச 5:21)

  • கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வேதம் வாசித்தல் ஜெபித்தல் ஆகியவை ஒரு கட்டிடத்தின் அஸ்திபாரத்தை போன்று மிக முக்கியமானது. எந்த அளவுக்கு அஸ்திபாரம் வலிமையாக, ஆழமாக உள்ளதோ அதைப்பொறுத்தே உயரமான பெரிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. அதுபோல எந்த அளவுக்கு வேதம் வாசித்தல் ஜெபித்தல் ஆகியவை காணப்படுகிறதோ அந்த அளவுக்கு வெற்றியுள்ள, வல்லமையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ இயலும்.

  • தேவன் சில முன்னேற்றங்களை () வெற்றிகளை உங்கள் வாழ்க்கையில் தரக்கூடும். அதேநேரம் தேவனுக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்ததை மகிமையை முன்னேற்றங்களுக்கோ () வெற்றிகளுக்கோ, மனிதர்களுக்கோ ஒருபோதும் கொடுத்துவிடக் கூடாது.

  • உங்களுக்கு உங்கள் எதிர்காலத்தைக் குறித்த பல திட்டங்கள் காணப்படலாம்..! ஆனால், தேவனுக்கும் உங்களைக் குறித்த ஒரு திட்டம் உண்டு. என்பதை மறந்துவிடக்கூடாது. அது ஒருவேளை உங்கள் திட்டங்களிலிருந்து மாறுபடலாம்.

  • உங்கள் வாழ்க்கையில் நெருக்கம் வருகிறது என்றால் தேவன் பெருக்கத்தை (வளர்ச்சியை முன்னேற்றத்தை) கட்டளையிடுகிறார் என்று அர்த்தம்.

  • கர்த்தர் உங்களை உருவாக்குகிறவர் எனில் உங்கள் தேவைகளையும் அவர் அறிவார். உங்கள் தேவைகள் விருப்பங்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் சரியானவிதத்தில் சந்திப்பார்.

  • நீங்கள் மிகவும் நம்பியிருந்த () உங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்த நபர்(கள்) உங்களைவிட்டு விலகலாம்..! இது மேற்படி நபர்களின் துணையின்றியே தொடர்ந்து முன்னேற தேவன் நம்மை  பலப்படுத்தி விட்டார் என்பதை காட்டுகிறது.

  • சில நேரங்களில் தேவன்  சில கொடூரமான மனிதர்களை உங்கள் வாழ்க்கையில் அனுமதிப்பது; உங்களை துன்பப்படுத்துவதற்காக அல்ல. மாறாக அவருடைய சித்தத்தின்படியான பாத்திரமாக மாற்றுவதற்காக.

  •  நாம் உடைக்கப்படாவிட்டால் சிலநேரங்களில் தேவன் விரும்பும் விதத்தில் நாம் பயன்படுத்தப்பட இயலாது. ( சிலரை உடைத்துதான் பயன்படுத்த முடியும் என்பது ஒரு சோகமான உண்மை).

  • அனேகருக்கு நான் ஒரு முள்ளாக (உபத்திரவம்) இருக்கிறேனே...! யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறேனே...! என்ற எண்ணம் உங்களுக்கு காணப்படுகிறதா...?  கலங்கவேண்டாம்..!!!  கர்த்தருக்கு கீழ்படிந்து அவரது வார்த்தைகளை மட்டும் கைக்கொண்டு பாருங்கள் அவர் உங்களையும் அதிசயமான விதத்தில் பயன்படுத்துவார். உங்கள் வாழ்க்கையிலும் அற்புதம் செய்வார்.

  • சிலநேரங்களில் தேவனால் நாம் பயன்படுத்தப்படவில்லையோ..!? என யோசிக்கத்தோன்றும். ஆனால் அது தவறான சிந்தனை. தேவன் நம்மை ஒரு உயரிய நோக்கத்திற்க்காகவே கிரயம் செலுத்தி மீட்டுள்ளார்.

  • நம்மில் பெரும்பாலானவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலே பயன்படுத்தப்படவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் தேவனுக்கு ஒவ்வொருவரைக்குறித்தும் தனிப்பட்ட நோக்கமும் திட்டமும் உண்டு. நாம் தேவசித்தத்தின்படி பயன்படுத்தப்பட அற்பணிப்புடன் காணப்பட வேண்டும்.

  • உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைக்குறித்து நீங்கள் அதிகமாகக் கலங்கவேண்டாம். உங்களை படைத்தவர், உங்கள்   திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்பட அனுமதிக்கமாட்டார்.
 ----                ----                ----


 என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
(ஏசா 41:8-10)

1 கருத்து: